திமுக தேர்தல் வாக்குறுதிகளை பெற்று தருவேன்: பனையூர் பாபு உறுதி

செய்யூர்: செய்யூர் (தனி) தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு போட்டியிடுகிறார். இவர் இத்தொகுதியில் பானை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது மக்களிடையே பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு மாதந்தோறும் ₹1000 உரிமை தொகை வழங்கப்படும். மேலும், வரும் கலைஞர் பிறந்த நாளன்று கொரோனா நிவாரண நிதியாக 4000 அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.இத்தொகுதியில் நான் வெற்றி பெற்றதும், திமுக வாக்குறுதிகள் அனைத்தையும் மக்களுக்கு நான் உறுதியுடன் பெற்று தருவேன். பின்தங்கியுள்ள செய்யூர் தொகுதி வளர்ச்சி அடைய நான் பாடுபடுவேன். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய செய்து, செய்யூர் தொகுதியில் போட்டியிடும் எனக்கு பானை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரசாரத்தில் காஞ்சிபுரம் திமுக எம்பி ஜி.செல்வம், ஒன்றிய செயலாளர்கள் எம்.எஸ்.பாபு, கே.எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன், ஊராட்சி செயலாளர் தணிகாசலம், நிர்வாகிகள் பாபு ஆசிரியர், மோகன்தாஸ், ராமமூர்த்தி, குப்புசாமி, அருண்மொழிவர்மன், செய்யூர் கேடிஆர்.கதிரவன், தசரதன், சுரேஷ், காண்டீபன், ரங்கநாதன், பாண்டுரங்கன், கார்த்தி, ஜெயக்குமார், ஜெகன், ஜெகநாதன், ராஜாராமன், நரேஷ், விசிக மேலிடப் பொறுப்பாளர்கள் பார்வேந்தன், சூ.க.விடுதலைசெழியன், மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post திமுக தேர்தல் வாக்குறுதிகளை பெற்று தருவேன்: பனையூர் பாபு உறுதி appeared first on Dinakaran.

Related Stories: