கத்தார்: மதகுருமார்கள், பிஷப்புகளால் கன்னியாஸ்திரிகள் பாலியல் கொடுமைக்குள்ளாவது உண்மை தான் என கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டுள்ளார். உலக வரலாற்றில் முதல் முறையாக அரபு நாட்டுக்கு சென்ற போப் பிரான்சிஸ், அபுதாபியில் நேற்று நிறைவேற்றிய சிறப்பு திருப்பலியில் 1.70 லட்சம் கத்தோலிக்கர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றுவிட்டு விமானத்தில் கத்தார் செல்லும் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு போப் பிரான்சிஸ் பதிலளித்தார். அப்போது செய்தியாளர்கள் வாட்டிகனில் இருந்து வெளியாகும் பெண்கள் பத்திரிக்கை ஒன்றில், கன்னியாஸ்திரிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது பற்றியும், மதகுருமார்கள் மற்றும் பிஷப்புகளுக்கு எதிராக கன்னியாஸ்திகள் பாலியல் புகார்கள் அளித்து வருவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.