புதுக்கோட்டை அருகே பிரிந்து சென்ற மனைவியை கொலை செய்த கொடூர கணவர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பிரிந்து சென்ற மனைவியை தேடிச் சென்று கொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பட்டப்பகலில் மனைவியை கத்தியால் குத்தி, கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலுச்சாமி - லதா தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளது. இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். இதனால் ஆத்திரம் அடைந்த லதா தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கணவனை விட்டுப் பிரிந்த தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் குடும்ப வறுமை காரணமாக விராலிமலை பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இன்று காலை லதா பணிபுரியும் கடைக்குச் சென்ற கணவர் வேலுச்சாமி, மனைவியுடன் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் லதாவின் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளான். இந்த தாக்குதலில் லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வேலுச்சாமி, விராலிமலை காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் வேலுச்சாமிக்கு கையில் அடிபட்டு இருந்தால் அங்கிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனையடுத்து சிகிச்சை முடிந்த உடன் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: