புதுடெல்லி: சுனந்தா புஷ்கர் மரண விவகாரத்தில் சுப்ரமணியன் சுவாமியின் மனுவை டெல்லி மாநகர கூடுதல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்துக்கு உதவ அனுமதிகோரி தொடர்ந்த மனுவை டெல்லி மாநகர கூடுதல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து டெல்லி அமர்வு நீதிமன்றம் வரும் 21ம் தேதி முதல் சுனந்தா புஷ்கர் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.