பைக் மீது லாரி மோதி 2 பேர் பலி

புதுடெல்லி: டெல்லி மத்திய மஹால் பகுதியை சேர்ந்தவர் வெக்ராம்கான். இவர் தனது நண்பருடன் நேற்று அதிகாலை பைக்கில் நிகாம்போதிகாட் பகுதியில் வந்து கொண்டு இருந்தார். அப்பாது சாஸ்திரி பார்க் பகுதியில் இருந்து வேகமாக லாரி வந்தது. தாறுமாறாக வந்த அந்த லாரி காஷ்மீரிகேட் பகுதியில் பைக் மீது மோதியது. பின்னர் நடைபாதை மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் பைக்கில் வந்த வெக்ராம்கான் மற்றும் அவரது நண்பர் பலியானார்கள். மேலும் நடைபாதையில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் மீது லாரி மோதியதில் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர்களது விவரங்கள் சேரிக்கும் பணி நடந்து வருகிறது. நேரு விஹார் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அதிக் அகமது கைது செய்யப்பட்டார். …

The post பைக் மீது லாரி மோதி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: