அபுதாபி: இன்று அபுதாபியில் நடைபெறும் 17வது ஆசியக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஜப்பானும், முதல்முறையாக கோப்பையை வெல்லும் கனவில் கத்தாரும் மோத உள்ளன. ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில்(யுஏஈ) 17வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. ஆசியா, ஓசியான் பகுதிகளில் உள்ள 32 நாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. ஜன.5ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியி இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜப்பான்-கத்தார் அணிகள் மோத உள்ளன. ஜப்பான் அணி 5 முறையாகவும், கத்தார் முதல்முறையாகவும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன. லீக் சுற்றில் துர்க்மெனிஸ்தான், ஓமன், உஸ்பெஸ்கிஸ்தான் அணிகளையும், ரவுண்ட் -16ல் சவுதி அரேபியாவையும், காலிறுதியில் ஓமனையும், அரையிறுதியில் ஈரானையும் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற 1992, 2000, 2004, 2011 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது ஜப்பான். துடிப்பான இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியாக ஜப்பான் இருக்கிறது.