புழல்: லாரி மோதி மாணவன் பலியா னான். புழல் லட்சுமிபுரம் வஉசி தெருவை சேர்ந்த பூபதி மகன் கிஷோர் (25). கல்லூரி மாணவர். நேற்று மாலை கல்லூரி முடிந்து பைக்கில் வந்து கொண்டிருந்தார். கடப்பாரோடு-வில்லிவாக்கம் ரோடு சந்திப்பில் வந்தபோது அந்தவழியாக வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். மாதவரம் போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.