சென்னை: ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். பொக்ரைன் அணுஆயுத சோதனையின் போது வாஜ்பாய்க்கு துணை நின்றவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என அவர் குறிப்பிட்டார். மேலும் ஜார்ஜ் பெர்னாண்டஸின் நாட்டுப்பற்றை யாராலும் மறக்கவோ, மறுக்கவோ இயலாது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.