புதுடெல்லி: ‘‘ஒவ்வொரு உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு சராசரியாக 4,500 வழக்குகளும், கீழ் நீதிமன்ற நீதிபதி முன்பு சுமார் 1,300 வழக்குகளும் நிலுவையில் உள்ளன’’ என சட்ட அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. தேசிய நீதித்துறை புள்ளிவிவர மையத்தின் கணக்குப்படி 2018ம் ஆண்டு இறுதி வரை மாவட்ட மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்களில் 2.91 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. 24 உயர் நீதிமன்றங்களில் 47.68 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன் அடிப்படையில் ஒன்வொரு உயர் நீதிமன்ற நீதிபதியின் முன்பு சராசரியாக 4,419 வழக்குகளும், கீழ்கோர்ட் நீதிபதியிடம் 1,288 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.