வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய துாதரகத்தின் முன் இந்திய தேசியக் கொடியை எரிக்க காலிஸ்தான் ஆதரவாளர்கள் முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தியாவில் குடியரசு தினம் நேற்று முன்தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு ெதரிவித்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் நேற்று முன்தினம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் (இந்தியாவில் தனிநாடு கோரும் சீக்கியர்கள்) கூடினர். அவர்கள் காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டுக்கொண்டு இந்திய தேசியக் கொடியை எரிக்க முயற்சித்தனர். அப்போது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் அங்கே அதிகமாக கூடியிருந்தனர், அவர்களும் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வந்தே மாதரம் என்றும் பாரத மாதாக்கி ஜே என்றும் கோஷமிட்டு அவர்களை நோக்கி முன்னேறினர்.