குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே உள்ள 500 ஆண்டுகள் பழமையான ராமகிரி நரசிங்க பெருமாள் கோயில் தேரை புதுப்பிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் 500 ஆண்டுகள் பழமையான கல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோயில் சேதமடைந்ததால், கடந்த 10 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. தற்போது பொதுமக்கள் பங்களிப்புடன் கோயில் கட்டிட சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் கோயிலுக்கு சொந்தமான 500 ஆண்டுகள் பழமையான தேர் சீர் செய்யப்படாமல் உள்ளது. சேதமடைந்த தேரை தென்னங்கீற்று கூரையின் கீழ் நிறுத்தியுள்ளனர்.