நாசிக் : மராட்டிய மாநிலம் நாசிக் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் பத்திரிக்கையாளர்கள் இரண்டு பேர் உட்பட 3 பேர் காயமடை ந்தனர். அதிகாலையில் நுழைந்த சிறுத்தை குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் மீது சுற்றி வந்தது. தகவலறிந்து வனத்துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அங்கு சென்ற போது அவர்கள் மீது சிறுத்தை பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.