மராட்டியத்தில் சிறுத்தை தாக்கி 3 பேர் காயம் : படம் பிடித்த பத்திரிகையாளர்கள் மீதும் பாய்ந்த சிறுத்தை

நாசிக் : மராட்டிய மாநிலம் நாசிக் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் பத்திரிக்கையாளர்கள் இரண்டு பேர் உட்பட 3 பேர் காயமடை ந்தனர். அதிகாலையில் நுழைந்த சிறுத்தை குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் மீது சுற்றி வந்தது. தகவலறிந்து வனத்துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அங்கு சென்ற போது அவர்கள் மீது சிறுத்தை பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பலமணிநேர போராட்டத்திற்கு பின் சிறுத்தையை வனத்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். சிறுத்தை தாக்கியதில் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் இரண்டு பத்திரிக்கையாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: