ஆவடி: ஆவடி நகராட்சியில் துப்புரவு பணியில் சுமார் 675க்கு மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் ஒப்பந்த நிறுவனம் வழங்கவில்லை. அவர்கள் பலமுறை முறையிட்டும் வழங்காததால் ஊழியர்கள் பண்டிகை கொண்டாட முடியாமல் அவதிப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை பட்டாபிராம், தண்டுரை, கோயில்பதாகை, திருமுல்லைவாயல் கோட்டங்களில் துப்புரவு பணிகளை புறக்கணித்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் துப்புரவு பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது.