அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி ; அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை திங்களன்று தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகக் கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்தது. எதிர்வரும் தேர்தல்களில் குக்கர் சின்னம் கேட்டு டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: