உ.பி.: உத்தரப்பிரதேசம் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ்-மாயாவதி கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் தரப்படவில்லை. கூட்டணியில் இடம் கிடைக்காததால் பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. காங்கிரசில் பதவி தந்ததன் மூலம் பிரியங்கா காந்தி நேரடியாக அரசியலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.