மாஸ்கோ: ரஷ்ய கடல் பகுதியில் இந்தியர்களுடன் சென்ற இரு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யா - கிரிமியா இடையேயான கெர்ச் நீரிணையில் தான்சானியக் கொடிகளுடன் நேற்று இரண்டு கப்பல்கள் சென்றன. கேண்டி என்ற பெயர் கொண்ட 8 பேர் இந்தியர்கள், 8 துருக்கி நாட்டைச்சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். தி மேஸ்ட்ரோ என்ற கப்பலில் 15 பேர் இருந்துள்ளனர். அவர்களில் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் 7 பேர். இந்தியாவை சேர்ந்தவர்கள் 7 பேர். இதேபோன்று லிபியா, ரஷ்யாவை சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.