அவனியாபுரம்,: முதல்வர் பதவிக்காக யாகம் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, மதுரையில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அளித்த பேட்டி: முதல்வர் பதவிக்காக யாகம் நடத்தினேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். யாகம் நடத்தி முதல்வர், பிரதமர் பதவிக்கு வரலாம் என்றால், யார் வேண்டுமானாலும் பதவியை பெறலாம். தலைமை செயலகத்தில் எனது அறையிலுள்ள கான்பரன்ஸ் ஹாலில் கரையான் அரித்து இருந்தது. அதுதான் சரி செய்யப்பட்டது. யாகம் எதுவும் நடத்தப்படவில்லை.