தலிபான்கள் தாக்குதல் 12 பேர் பரிதாப சாவு

காபூல்: ஆப்கானிஸ்தானின் மெய்டன் வார்டாக் மாகாணத்தில் ராணுவ முகாம் மற்றும் போலீஸ் பயிற்சி மையம் உள்ளது. இந்த ராணுவ முகாம் வளாகத்தில் நேற்று காலை கார் வெடிகுண்டு தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தினர். தொடர்ந்து பயிற்சி மையத்துக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள், ஆப்கன் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தியதில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: