புதுடெல்லி: சிபிஐ முன்னாள் இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கை டிஎஸ்பி ஏ.கே.பாசி விசாரித்து வருகின்றார். இந்நிலையில் பொறுப்பு இயக்குனராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவ், விசாரணை அதிகாரியான ஏ.கே.பாசியை, போர்ட் பிளேருக்கு பணியிட மாற்றம் செய்து கடந்த அக்டோபர் 24ம் தேதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஏ.கே.பாசி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.