சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 6 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாத நிலையில் விஜயபாஸ்கர் ஆணையத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராகினார். ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அமைச்சரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.