சேலம்: தமிழ்நாடு கள் இயக்க கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை வகித்தார். கூட்டத்திற்கு பின் அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு கடந்த 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு முக்கிய பயிராக கருதப்படுகிறது. இந்த பயிர் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை பாதுகாக்கும் வகையில், மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம், சோயா மாவு ஆகிய மூலப்பொருட்களை கொண்டு மக்கும் தன்மை கொண்ட பைகளை தயாரிக்க முடியும்.