உல்லாசத்துக்கு மறுத்ததால் ஆத்திரம் ரிப்பனால் கழுத்தை இறுக்கி இளம்பெண் படுகொலை

 „* திருமுல்லைவாயலில் பயங்கரம்

* கள்ளக்காதலன் போலீசில் சரண்

ஆவடி : திருமுல்லைவாயல், நாகம்மை நகர்,  திருவள்ளுவர் தெருவில் வாடகை வீட்டில் வசித்தவர் திலகா (32). இவரது கணவர்  தீபன். இவர்களது 12 வயது மகள், அதே பகுதி சத்தியமூர்த்தி நகரில்  உள்ள அரசு  பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறாள். ஆவடியில் உள்ள மின் வாரியத்தில்  பணியாற்றி வந்த தீபன், கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக  காலமானார். இந்நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு, திலகா தனது  மகளுடன் தாய் வீடான திருவள்ளூர் அருகே கனகம்மாசத்திரம் சீத்தாபுரத்திற்கு  சென்றார். நேற்று முன்தினம் இரவு திலகா, அதே ஊரைச் சேர்ந்த உறவினர் குமார் (45) என்பவருடன் திருமுல்லைவாயல் வீட்டிற்கு  வந்துள்ளார். நேற்று காலை 11 மணி வரை திலகா வீட்டை  விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேக மடைந்த அக்கம் பக்கத்தினர்  வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் திலகா  இறந்து கிடந்தார். அவருடன்  தங்கியிருந்த உறவினர் குமார் மாயமாகி இருந்தார்.

இதுகுறித்து வீட்டு உரிமையாளர் குருலிங்கம் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். திருமுல்லை வாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும்,  வழக்குப்பதிவு செய்து குமாரை தேடினர். இதற்கிடையில், நேற்று மதியம் குமார் வேலூர்  வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். தகவல் அறிந்ததும்  போலீசார் விரைந்து சென்று குமாரை திருமுல்லைவாயல்  காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில்,  திலகாவை கொலை செய்ததை  குமார் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கணவர் தீபன் இறந்த பிறகு, திலகா அடிக்கடி சொந்த ஊரான கனகம்மாசத்திரத்தில்  உள்ள தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது, அவரது உறவினரான குமாருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த வீட்டு உரிமையாளர், வீட்டை காலி செய்யுமாறு திலகாவிடம் கூறி  உள்ளார்.

இதற்கிடையில், கள்ளக்காதலன் குமாரை  தன்னுடனே  தங்கிக்கொள்ள திலகா வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு,  அவர் எனக்கு மனைவி  மற்றும் குழந்தைகள் உள்ளனர். எனவே, நான் அவ்வப்போது வந்து உன்னுடன்  உல்லாசமாக இருந்துவிட்டு செல்கிறேன் எனக் கூறி உள்ளார். இதனால்  அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று  முன்தினம்  திலகா, பொங்கல் பண்டிகை முடிந்து மகளை தாய் வீட்டில்  விட்டுவிட்டு திருமுல்லைவாயலுக்கு புறப்பட்டார். அவருடன் குமாரும்  வந்துள்ளார். இரவு உல்லாசத்திற்கு குமார் அழைத்த போது, திடீரென  திலகா  மறுத்து உள்ளார். இதில், ஆத்திரமடைத்த குமார், தலைமுடியை கட்டும் ரிப்பனை  முறுக்கி, திலகாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர், அவர்  அதிகாலையில் எழுந்து ரயில் மூலமாக வேலூர் சென்று வடக்கு காவல் நிலையத்தில்  சரணடைந்துள்ளார்.

இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து,  குமாரை போலீசார் கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: