தஞ்சையில் 22ம் தேதி மாநில செயற்குழு கூட்டம்: வணிக சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்ட அறிக்கை: பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் வரும் 22ம் தேதி காலை 10.35 மணிக்கு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் வணிகர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு அளித்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும். இந்த கூட்டத்திற்கு மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: