திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குரும்பேரி ஊராட்சியில் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு இரு பிரிவினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. ஜனவரி 1ம் தேதி ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை ஊருக்குள் புகுந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து தாலுகா போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் ஊர் மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைக்க சென்றனர். அப்போது திடீரென மற்றொரு தரப்பினர் கும்பலாக வந்து பெண்களையும், ஆண்களையும் சரமாரியாக தாக்கினார்கள். இதில் அலறியடித்துக்கொண்டு கோயிலில் இருந்து பெண்கள் வெளியே ஓடி வந்தனர்.