சென்னை: தமிழகத்தில் கடந்தாண்டில் மட்டும் புதிதாக 1.03 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாட்டில் 21.32 லட்சம் பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகப்பட்சமாக 4.10 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டில் மட்டும் புதிதாக 1.03 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.