அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து : 3 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன் : அமெரிக்காவில் பெய்துவரும் கடும் பனிப்பொழிவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் வாஷிங்டனில் வழக்கத்தை விட 2 முதல் 4 அங்குல அளவுக்கு அதிகமாக பனி கொட்டியுள்ளது. இதனால் சாலைகளில் பனி படந்துள்ளதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பனியால் போர்த்தப்பட்டு காணப்படுகிறது. கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன், மேரிலேண்ட், விர்ஜீனியா, சோரி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் நூற்றுக்கணக்கான விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விமானங்கள் தாமதமாக வருகின்றன. அமெரிக்காவில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே அமெரிக்காவின் வட கிழக்கு பகுதியில் தாக்கிய பனி புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 1,609 கி.மீ. தூரம் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த பனிப்புயலால் கன்சாஸ், இன்டியானா பொலிஸ், வாஷிங்டன், டென்வர், மிசோரி, செயின்ட் லூயிஸ், அர்கன் சாஸ் உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மின்தடை நிலவுகிறது. பனிப்பொழிவால் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: