பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ரபேல் ஊழலை கண்டித்து பொதுக்கூட்டம் மண்ணடி தம்புசெட்டி தெருவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் சிவராஜசேகரன் தலைமை வகித்தார். இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு பேசியதாவது: மத்தியில் 2019ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் ஆண்டாக அமையும். தமிழகத்தில் பெரிய கட்சியாக அதிமுக இருந்தது. அந்த கட்சி தற்போது சிதறிப்போய் கிடக்கிறது. இப்போது திமுக, காங்கிரஸ் தான் பெரிய கட்சிகளாக உள்ளது.