சண்டிகர்: ஹரியானாவில் ஆண், பெண் எலும்பு கூடுகள் முதன் முறையாக ஒரே கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹரியானாவிலுள்ள ரகிகரி என்ற இடத்தில் ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த ஆண், பெண் எலும்பு கூடுகள் ஒரே கல்லறையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எலும்பு கூடுகளின் கைகள் மற்றும் கால்கள் நீளமான தோற்றத்தில் உள்ளன. இந்த ஜோடிகள் ஒரே நேரத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளார்.