விழுப்புரம்: விழுப்புரம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 22 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பூத்தமேடு கிராமத்தில் குடோனில் இருந்து ரேசன் அரிசியை ஏற்றியபோது அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். 430 மூட்டை அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் 4 பேரை கைது செய்தனர்.