சமையல் எண்ணெய் குடோனில் தீ: பொள்ளாச்சி அருகே பரபரப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி  அருகே சமையல் எண்ணெய் குடோனில் பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது. இதில் எண்ணெய் நிரப்பிய பேரல்கள் வெடித்து சிதறியது.பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடியில், சண்முகசுந்தரம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், சமையல் எண்ணெய் குடோன் நடத்தி வருகிறார். குடோனுக்கு பிளாஸ்டிக் பேரலில் வரும் சமையல் எண்ணையை, இரும்பு பேரலில் மாற்றி விற்பனைக்கு அனுப்பி வந்தார். மேலும் கழிவுஆயில் சுத்திகரிப்பும் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில், ஆயில் குடோனில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ, மளமளவென எரிய துவங்கியது. அங்கிருந்த தொழிலாளர்கள் தப்பி ஓடினர்.

இதில், இருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.அப்போது திடீரென ஆயில் பேரல்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் மேற்கூரை பெயர்ந்து விழுந்து குடோன் தரைமட்டமானது. 150 அடிக்குமேல் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து இரவு 9 மணி வரை போராடி தீயை அணைத்தனர். ஆயில் பேரல்கள் ஒன்றுக்கொன்று உரசியபோது, அழுத்தம் தாங்காமல் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கோமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: