கான்பெர்ரா: ஜெல்லி மீன்களின் தொல்லை அதிகரித்து இருப்பதால், ஆஸ்திரேலியாவில் உள்ள சில கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. பலத்த காற்று வீசியதன் காரணமாக குயின்ஸ்லாந்தில் உள்ள கடற்கரை பகுதிகளை நோக்கி, 15 செண்டி மீட்டர் நீளமுடைய புளூபாட்டில் ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. கடலில் ஆழமான இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வகை ஜெல்லி மீன்கள் வாழ்கின்றன. அவை ஆழ்கடலில் மட்டுமே வாழும் தன்மை கொண்டவை. கடந்த 2004–ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய இனமாக ‘இருகாண்ட்சி’ என்ற ஜெல்லிமீன் வகை அறிஞர்களால் கண்டறியப்பட்டது. இது, உலகிலேயே அதிக விஷத் தன்மையுள்ள ஜெல்லி மீன் என்ற பெயரினைப் பெற்றது.