விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுர வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பென்னாகரம் தாலுக்காவில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணியை தடுக்க கோரி டி.சின்னச்சாமி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். நில உரிமையாளர்களின் அனுமதி பெறாமல், விதிகளுக்கு முரணாக மின்கோபுரம் அமைப்பதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார். மின்துறை செயலாளர், தருமபுரி ஆட்சியர், பென்னாகரம் வட்டாட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநரும் பதில்தர உத்தரவிட்டு வழக்கு ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: