சென்னை : ஜெயலலிதாவுக்கு இதய சிகிச்சை அளித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவர் கூறியுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் நடந்த விசாரணைக்கு பின் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அப்போலோவுக்கு வந்த அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றி அமைச்சர்களுக்கு தெரிந்ததால் ராதாகிருஷ்ணன் அறிக்கையாக தாக்கல் செய்யவில்லை என்று வழக்கறிஞர் கூறினார்.