புதுடெல்லி: மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொது நலன் வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. மேகாலயா மாநிலத்தில் சட்ட விரோதமாக செயல்படும் சுரங்கம் ஒன்றில் கடந்த டிசம்பர் 13ம் தேதி, அருகில் உள்ள ஆற்றில் இருந்து வெள்ளம் புகுந்தது. இதில், சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் சுரங்கத்தில் க்கியவர்களின் குடும்பத்தினர் கூறுகையில், சுரங்கத்தில் சிக்கியவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம். இறுதி சடங்கு செய்வதற்காக அவர்களது சடலங்களையாவது மீட்டுக்கொடுங்கள் என்று அரசிடம் கோரிக்கை வைத்தனர்.