புதுடெல்லி: ‘ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இந்துக்களால் காத்திருக்க முடியாது’ என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது. ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டுமென ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக நேற்று முன்தினம் பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘அயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியாக கூறிவிட்டார்.