வம்பிழுத்த டிம் பெய்ன்...... பதிலடி கொடுத்த ரோகித் சர்மா

மெல்போர்ன்: மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன், இந்திய வீரர் ரோகித் சர்மாவை வம்புக்கு இழுத்தார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் ஆஸியும் வெற்றி பெற்றதால், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் கோஹ்லி 82, புஜாரா 106, ரகானே 34 ரன்கள் எடுத்தனர்.

ரோகித் 26 ரன்கள் எடுத்த போது விக்கெட் கீப்பராக இருந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெய்ன், சக வீரர்களிடம் பேசுவது போல, ரோகித் இங்கு சிக்சர் அடித்து விட்டால், ஐபிஎல் தொடரில் எனது ஆதரவை, பெங்களூரு அணியில் இருந்து மும்பை அணிக்கு மாற்றி விடுகிறேன், என்று கூறி வம்பிழுத்தார். இதைக் கண்டு கொள்ளாமல் பேட்டிங்கில் கவனம் செலுத்திய ரோகித் சர்மா, அரைசதம் அடித்து பதிலடி கொடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: