கோபால்பட்டி: கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி புனித ஞானப்பிரகாசியார் தேவலாயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சிறப்பு திருப்பலி நேற்று நடைபெற்றது. இதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 8 ஆயிரம் கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த அரசை கலைத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் கஜா புயலில் மீட்புப்பணி தாமதமடைந்துள்ளது. இதனை பயன்படுத்தி அரசு அலுவலர்கள் அதிகளவில் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர்.