பெர்த் பிட்ச் சராசரியா? சச்சின் கடுப்பு

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே 2வது டெஸ்ட் போட்டி நடந்த பெர்த் மைதான ஆடுகளத்துக்கு, ஐசிசி போட்டி நடுவர் ரஞ்சன் மடுகல்லே ‘சராசரி’ என சான்றளித்ததை மைக்கேல் வாஹன், மிட்செல் ஜான்சன் ஆகியோர் குறை கூறியிருந்த நிலையில், சச்சின் டெண்டுல்கரும் விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டெஸ்ட் போட்டிகளில் ஆடுகளத்தின் தன்மை முக்கிய பங்காற்றுகிறது. பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் திறமையை சோதித்த பெர்த் ஆடுகளம் போன்று நிறைய பிட்ச்கள் தேவைப்படுகின்றன. அப்போது தான் ரசிகர்களிடையே டெஸ்ட் மீதான ஆர்வத்தை தூண்ட முடியும். எப்படி பார்த்தாலும் பெர்த் ஆடுகளம் சராசரியானது அல்ல’ என்று தகவல் பதிந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: