சென்னை: தமாகா மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று காலை நடந்தது. இதற்கு கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மூத்த துணை தலைவர் ஞானசேகரன், கோவை தங்கம், கத்திபாரா ஜனார்த்தனன், தலைமை நிலைய செயலாளர் ஜிஆர் வெங்கடேஜ், என்டி சார்லஸ், ஜேஎஸ்கே சதீஸ்குமார், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், விஜி தாக்கோ உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உச்சநீதிமன்றம், காவிரி ஆணையம் கர்நாடகா மேகதாது அணை கட்டும் பணிகளை செய்யக்கூடாது, தீர்ப்புக்கு மீறி அணை கட்டும் விஷயமாகவோ, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. அதை மீறி, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை கண்டிக்கிறோம்.