அவதூறு வழக்கு அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்

அம்பை:நடிகர்கள் ஆர்யா, விஷால் நடித்த ‘அவன் இவன்’ திரைப்படம் 2011ல் வெளியானது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். இதில் சிங்கம்பட்டி ஜமீன் மற்றும் முண்டந்துறை சொரிமுத்து அய்யனார் கோயிலை பற்றி  தவறாக சித்தரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மகன் சங்கராத்மஜன் தீர்த்தபதி, முத்துராமன் ஆகியோர் அம்பை கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தனர். நேற்று இவ்வழக்கு விசாரணைக்காக டைரக்டர் பாலா ஆஜரானார்.  பின்னர், ஜன.4க்கு தள்ளிவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: