புதுடெல்லி: ரயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஐஆர்டிசி.க்கு சொந்தமான ஓட்டல்கள், தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இதில், ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் அப்போதைய ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மேலும், லாலு, அவரது மனைவி ரப்ரிதேவி, மகன் தேஜஸ்வி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறையும் சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.