சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய, காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் போது, தமிழகத்திலும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.அண்ணா, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழகத்துக்கு பல நல்ல செயல்கள் நடந்தன. காங்கிரஸ் ஆட்சியின்போது, நல்ல செயல்கள் நடந்துள்ளன. ஆனால், தற்போது அமைச்சர்களாலும், அமைச்சரவையாலும் தமிழகத்துக்கு வரலாறு காணாத வகையில் மிக பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஊழல்களில் சிக்கியுள்ள அமைச்சர்கள், சிபிஐ அலுவலகத்தில் பலமணி நேரம் காத்து நின்று விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். இது மிக பெரிய வெட்கக்கேடு. இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.