திருச்சி: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சிவலிங்கம் (94). இவர் அஞ்சல்துறையில் 1944ல் பணியில் சேர்ந்து கடைசியாக அரியலூர் போஸ்ட் மாஸ்ட்ராக பணியாற்றி 1982ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர் திருச்சி கே.கே.நகர் சேஷசாயி நகர் அன்னை தெரசா தெருவில் மகன்களுடன் வசித்து வந்தார். இவர் நேற்று காலை காலமானார். அவரது விருப்பப்படி அவரது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு தானம் செய்ய மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று ஒப்படைக்க உள்ளனர். சிவலிங்கத்தின் உடலுக்கு அஞ்சல்துறை அதிகாரிகள், ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.அஞ்சல் துறையில் தந்தி அனுப்பும் முறை ஆங்கிலத்தில் இருந்து வந்தது. மோர்ஸ் கோடு பயன்படுத்தி ஒவ்வொரு குறியீடுக்கும் ஒரு ஆங்கில வார்த்தை அச்சிடப்பட்டு தந்தி அனுப்பப்பட்டு வந்தது. தந்தியை கிராம புற மக்கள் எளிதாக தெரிந்து கொள்ள தமிழில் அனுப்பும் முறையை கண்டுபிடிக்க சிவலிங்கம் முயற்சி மேற்கொண்டார்.