பெர்த்: அடிலெய்டு டெஸ்டில் 11 கேட்ச் பிடித்து உலக சாதனையை சமன் செய்த இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், அனுபவ வீரர் எம்.எஸ்.டோனியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். இது குறித்து பெர்த்தில் நேற்று அவர் கூறியதாவது: நாட்டின் கதாநாயகன் டோனி என்றால் மிகையாகாது. அவரிடம் இருந்து கிரிக்கெட் நுணுக்கங்களை நிறைய கற்றுக் கொண்டேன். ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாது, மிகச் சிறந்த மனிதராகவும் எனக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் அருகில் இருக்கும்போது தன்னம்பிக்கை தானாகவே அதிகரிக்கும். எந்த ஒரு பிரச்னை என்றாலும் அவரிடம் சென்றால் உடனடியாக நல்ல தீர்வு கிடைக்கும்.