வேதாரண்யம்: கஜா புயலால் வேதாரண்யம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புஷ்பவனம் மீனவர் கிராமத்தில் கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் வீடுகள் மற்றும் மீன்பிடி படகுகள் வலைகள் கடுமையான சேதம் அடைந்தது. புயல் வீசியபோது கடலில் இருந்து காற்று, கடல்நீர், சேறு கலந்து ஒரே நேரத்தில் புஷ்பவனம் மீனவர் கிராமத்திற்குள் புகுந்தது. விடிய, விடிய அடித்த காற்று அதிகாலையில் நின்றுவிட்டது. கடலில் இருந்து ஊருக்குள் 1 கிலோ மீட்டர் தூரம் 5 அடி உயரத்திற்கு சேறு நிரம்பிவிட்டது. சேற்றில் சிக்கி 50க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் லட்சக்கணக்கான வலைகள் காணாமல் போய்விட்டது. 50க்கும் மேற்பட்ட படகுகள் காற்றின் வேகத்தால் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்துள்ளது. தமிழக அரசு சார்பில் 2 இயந்திரங்களை கொண்டு சேற்றை அகற்றும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. சேற்றை அகற்றும் பணி மிக சிரமமானது.