திரிப்போலி: லிபியா நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் கடத்திச்சென்று பணயக் கைதிகளாக வைத்திருந்த 6 பேரை ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிபியா நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் ஜாப்ரா பகுதி ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஐஎஸ் அமைப்பினர் விரட்டியடிக்கப்பட்டு அப்பகுதியை ராணுவம் கைப்பற்றியது. அதற்குப்பின் அந்த பகுதியில் ஐஎஸ் அமைப்பினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் ஜாப்ரா மாவட்டத்தின் புகா எனும் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.