டெல்லி: ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் சமதா கட்சி விலகியுள்ளது. நாடாளுமன்றம் நாளை கூட உள்ள நிலையில் குஷ்வாகா விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவருமான உபேந்திர குஷ்வாகா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து கடந்த 2013-ஆம் ஆண்டு விலகிய உபேந்திர குஷ்வாகா, தனிக் கட்சி தொடங்கி, பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார்.