மும்பை: கடந்த வாரம் 5 நாள் வர்த்தகத்தில் ₹400 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர்.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சுமார் ₹60,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை விலக்கிக் கொண்டனர். இந்த தொடர் வெளியேற்றம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பங்குச்சந்தைகளில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. ஆனால், நவம்பரில் கச்சா எண்ணெய் விலை அபரிமிதமாக குறையத்தொடங்கியது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் நவம்பரில் மட்டும் ₹12,260 கோடி வெளிநாட்டு முதலீடு குவிந்தது. கடந்த ஜனவரிக்கு பிறகு இதுவே அதிகபட்ச முதலீடாக கருதப்பட்டது.