விஷமிகள் விபரீதம் இத்தாலி கிளப்பில் 6 பேர் நசுங்கி பலி

ரோம்: இத்தாலியில் உள்ள கோரினால்டோ என்ற நகரில் உள்ள இரவு விடுதியில் நேற்று பிரபல பாப் பாடகரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறிய இடத்தில் இந்நிகழ்ச்சி நடந்ததால், அரங்கில் நெரிசல் அதிகமாக இருந்தது. அப்போது, விஷமிகள் சிலர் துர்நாற்றம் வீசக்கூடிய திரவத்தை கூட்டத்தில் ஸ்பிரே செய்தனர். அது உடலில் பட்டதும் எரிச்சல் ஏற்பட்டது. இதனால், விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டு விட்டதாக கருதிய மக்கள், அலறியடித்து வெளியே ஓட முயன்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 வயதுடைய 3 வாலிபர்கள், 2 இளம்பெண்கள், தனது மகளை அழைத்து வந்த வயதான தாய் ஒருவர் என மொத்தம் 6 பேர் நசுங்கி பலியாகினர். மேலும், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால், அந்த பகுதியே சோகமானது. இந்த துயர சம்பவம் தொடர்பாக 8 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: