ஜனாதிபதி மியான்மர் பயணம்

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக வரும் 10ம் தேதி மியான்மர்  செல்கிறார். மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் அரசு முறை பயணமாக மியான்மர் செல்கிறார். வருகிற 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை மியான்மரில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் மூலமாக மியான்மர் உடனான இந்தியாவின் உறவை வளர்த்துக் கொள்ளும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஜனாதிபதி உறுதி செய்வார்’  என கூறப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: